பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Monday, April 14, 2008

தளிர்மா துளிர்க்க முந்திடுமா?

தளிர்மா துளிர்க்க முந்திடுமா?


தையே என்று சொல்லிவிட்டால்
---- தளிர்மா துளிர்க்க முந்திடுமோ?
மெய்யும் குளிரும் முன்பனியை
---- முட்டி உடைக்க இரண்டாமோ?
வெய்யில் நாளைத் தொடங்குதற்போல்
---- வேனில் ஆண்டைத் துவக்கிடுமே
அய்யே என்ன அரசாணை
---- அடியேன் நைந்து நொந்தேனே!


நடராஜன்.

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

சர்வதாரி வருக! சகலநன்மை தருக!!

(கோனினம் = அரசு,
மீனமும் வந்த காலம் = வருகின்ற பங்குனி மாதம்)

வானமும் மாரி பெய்து
---- வாழ்க்கையும் வண்ணம் சேர்ந்து
கோனினம் கொள்கை சார்ந்து
---- கொடுமைகள் குறைத்து காத்து
மீனமும் வந்த காலம்
---- மீதமாய் இன்பம் மட்டும்
மானுடம் காணு மாறாய்
---- வாருமே சர்வ தாரி!
* * * * * *
அன்புடன்
நடராஜன்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது