பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Saturday, October 07, 2006

அமாவாசை

*


அமாவாசை
===========

எங்கே சென்றனை நிலவே?
----- இன்றும் ஒருசிறு விடுப்பா?
மங்கிய ஒளியினில் புதிதாய்
----- மறுநாள் முடிந்ததும் வருவாய்
தங்கக் கம்பிபோல் சிறிதாய்
----- தருவாய் தரிசனம் மெலிதாய்
திங்கள் குணமெனத் தெரிந்தும்
----- திரும்ப வந்தது வியப்பே!



இன்று கண்டிட வேண்டும்
----- இரவும் ஒளியுடன் வேண்டும்
சென்று தேடிட வேண்டும்
----- சேர்ந்த இடமதும் ஏதோ?
தொன்று தொடர்ந்திடும் ஜாலம்
----- தொலையும் உத்தியை நானும்
வென்ற மனிதனாய் மாற
----- வித்தை கற்றிட வேண்டும்.


*

1 Comments:

Blogger ஓகை said...

சோதனைப் பின்னூட்டம்

October 08, 2006 1:22 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது