வண்ணத்தி நன்றி...
*
வண்ணத்தி நன்றி...
என்னின் மகரந்தம் எடுத்துயார் வருவார்
பொன்வண்டே உனக்கே பொறுத்தேன் நீயோ
அஞ்சிரைத் தும்பி அடடா நீயோ
கங்குல் நிறத்துக் கருவண்டே நீயோ
இங்கும் மதுவுண்ட என்தேனீ நீயோ
இப்போது வந்தனை வண்ணத்தி நீயோ
தப்பாது கொணர்ந்தாய் தயைசெய்தாய் நீயே
எண்ணி மகரந்தம் எடுத்தே வந்தனை
மண்ணில் சூம்பிநான் மடியா வண்ணம்
என்னின் மகரந்தப் பயணம் தந்தனை
சூலுறச் செய்தனை பாலுறச் செய்தனை
காய்சுமப்பேன் நானினி காணே! இன்றினி
தாய்நான் நவின்றேன் தகைந்த நன்றியே!
*
2 Comments:
வண்ணத்துப்பூச்சியின் எண்ணத்தை
அழகாக ஆக்கிய ஓகை நீர் வாழ்க தொடர்க
என்னார், உங்கள் வாழ்த்துக்கு மிக நன்றி.
Post a Comment
<< Home